search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமை ஆசிரியர்"

    • கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த பள்ளிக்கூடத்தில் 4-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு படித்த 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
    • பாதிக்கப்பட்ட 6 மாணவிகளுக்கும் தமிழக அரசு இழப்பீடாக ரூ.29 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ஒரு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக கடந்த 2015-ம் ஆண்டு முருகன் என்பவர் பணிபுரிந்தார். தற்போது அவருக்கு 62 வயதாகிறது.

    அவர் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த பள்ளிக்கூடத்தில் 4-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு படித்த 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் பாட்டி சிவகங்கையில் உள்ள அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் அப்போது சிவகங்கையில் இருந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே (தற்போதைய புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு) விசாரணை நடத்தி, தலைமையாசிரியர் முருகன் மீது போக்சோ சட்டம், தீண்டாமை ஒழிப்புச்சட்டம் உள்ளிட்ட 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார்.

    இந்த வழக்கின் விசாரணை சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி சரத்ராஜ், குற்றம் சாட்டப்பட்ட தலைமை ஆசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ஒவ்வொரு மாணவிக்கும் பாலியல் தொல்லை கொடுத்தது, தீண்டாமை ஆகிய குற்றங்களுக்கு என தனியாக 47 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.69 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    மேலும் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். அத்துடன் பாதிக்கப்பட்ட 6 மாணவிகளுக்கும் தமிழக அரசு இழப்பீடாக ரூ.29 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    • மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு திரண்டு வந்து சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
    • சம்மந்தப்பட்ட பள்ளிக்கு கல்வி அதிகாரி உமாதேவி என்பவர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம் சிக்கப் பல்லாப்பூர் மாவட்டம் முருகமல்லே என்ற இடத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி மாணவர்கள் கடந்த 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை பல்வேறு இடங்களுக்கு கல்வி சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியை பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதை மற்றொரு மாணவர் படம் எடுத்துள்ளார். இந்த நிலையில் அந்த காட்சிகள் கர்நாடக மாநிலம் முழுவதும் வைரல் ஆக பரவியது. இதுபற்றி தெரியவந்ததும் மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு திரண்டு வந்து சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து சம்மந்தப்பட்ட பள்ளிக்கு கல்வி அதிகாரி உமாதேவி என்பவர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது கல்வி சுற்றுலாவின் போது எடுத்த சில படங்கள் மற்றும் வீடியோக்களை தலைமை ஆசிரியை நீக்கியது தெரியவந்தது. இது குறித்து அவர் உயர் அதிகாரிகளுக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் மாணவருக்கு முத்தம் கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்டு செய்து கல்வித்துறை அதகாரிகள் நடிவடிக்கை எடுத்துள்ளனர்.

    • பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள்.
    • மாவட்ட சமூக நலத்துறை இணை இயக்குனர் சீனிவாஸ் உண்டு உறைவிட பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா எலவள்ளி கிராமத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான மொரார்ஜி தேசாய் உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். அங்கு பாரதம்மா என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். வார்டனாக மஞ்சுநாத் என்பவர் உள்ளார்.

    இந்த நிலையில் தலைமை ஆசிரியை பாரதம்மா, ஆசிரியர் முனியப்பா மற்றும் வார்டன் மஞ்சுநாத் ஆகியோர் மாணவ-மாணவிகளை அடித்து துன்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே தலைமை ஆசிரியை பாரதம்மா அந்த பள்ளியில் உள்ள கழிவறை தொட்டியை (செப்டிக் டேங்க்) சில மாணவர்களை கட்டாயப்படுத்தி வைத்து சுத்தம் செய்ய வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

    இதுதொடர்பான வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும், மாவட்ட சமூக நலத்துறை இணை இயக்குனர் சீனிவாஸ் உண்டு உறைவிட பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோலார் மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இந்த நிலையில், மாணவர்களை அடித்து துன்புறுத்தியதாகவும், மாணவர்களை வைத்து கழிவறை தொட்டியை சுத்தம் செய்ய வைத்ததாகவும் மொரார்ஜி தேசாய் உண்டு உறைவிட பள்ளியின் தலைமை ஆசிரியை பாரதம்மா, வார்டன் மஞ்சுநாத், சமூக அறிவியல் ஆசிரியர் அபிஷேக், ஓவிய ஆசிரியர் முனியப்பா ஆகிய 4 பேரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் அக்ரம் பாஷா உத்தரவிட்டுள்ளார். மேலும் தற்காலிக ஆசிரியர் மரேஷ், ஒப்பந்த பணியாளர் கலாவதி ஆகிய இருவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

    சஸ்பெண்டு செய்யப்பட்ட 4 பேர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் பற்றி தாலுகா சமூக நல அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில், மஸ்தி போலீசார் கழிவறை தொட்டியை சுத்தம் செய்ய மாணவர்களை ஈடுபடுத்தியதற்காக சஸ்பெண்டு செய்யப்பட்ட தலைமை ஆசிரியை பாரதம்மா, ஆசிரியர்கள் முனியப்பா, அபிஷேக் ஆகியோர் மீது எஸ்.சி., எஸ்.டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதில் தலைமை ஆசிரியை பாரதம்மா, ஆசிரியர் முனியப்பா ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாடியை ஒட்டி அமைந்துள்ள குடிநீர்த் தொட்டியின் மீது ஏறி எந்த பிடிமானமும் இல்லாமல் சில மாணவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள்.
    • அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அவை சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை கொரட்டூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டியை அப்பள்ளியில் பயிலும் நான்காம் வகுப்பு மாணவர்கள் சிலர் மிகவும் ஆபத்தான சூழலில் தூய்மைப்படுத்தும் காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. மாடியை ஒட்டி அமைந்துள்ள குடிநீர்த் தொட்டியின் மீது ஏறி எந்த பிடிமானமும் இல்லாமல் சில மாணவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மேல் மின்சாரக் கம்பி செல்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்ற சூழலில் மாணவர்களை குடிநீர்த் தொட்டியை தூய்மைப்படுத்தும் பணியில் பள்ளி நிர்வாகம் ஈடுபடுத்தியது கண்டிக்கத்தக்கது. அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

    அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அவை சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு பள்ளிகளின் பராமரிப்புக்காக அரசு கூடுதல் தொகையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் பள்ளிகளின் பராமரிப்புப் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மொட்டை மாடியில் உள்ள பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
    • சாலையில் சென்ற ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தார்.

    கொரட்டூர்:

    சென்னை கொரட்டூர் சாவடி தெருவில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது. ஒரு வார விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது.

    இந்தநிலையில் பள்ளியின் மொட்டை மாடியில் உள்ள பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். ஆபத்தை உணராமல் குடிநீர் தொட்டி மீது ஏறி நின்றபடி குடிநீர் தொட்டியில் இருந்த அசுத்த நீரை வாளி மூலம் வெளியேற்றி வந்தனர். இதை சாலையில் சென்ற ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தார்.

    இதுபற்றி பள்ளி மாணவர்களிடம் அவர் கேட்டபோது, தலைமை ஆசிரியர்தான் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய சொன்னதாக மாணவர்கள் கூறும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

    • ரவி பீரோவை திறந்து பார்த்தபோது அதில் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • ஜன்னல் கம்பியை உடைத்து அறைக்குள் புகுந்து பணத்தை திருடியது தெரியவந்தது.

    பெருந்துறை:

    பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக ரவி (54) என்பவர் உள்ளார்.

    ரவி தனது அறையில் உள்ள பீரோவில் ரூ.60 ஆயிரம் பணத்தை நேற்றுமுன்தினம் வைத்துவிட்டு சென்றார்.

    பின்னர் மறுநாள் காலை மீண்டும் அறைக்கு வந்த ரவி மதியம் பீரோவை திறந்து பார்த்தபோது அதில் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பீரோவின் பின்பகுதியில் இருந்த ஜன்னலை பார்த்தபோது ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டு இருப்ப தை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

    இரவில் வந்த மர்ம நபர் ஜன்னல் கம்பியை உடைத்து அறைக்குள் புகுந்து பணத்தை திருடியது தெரியவந்தது.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கு பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    பெருந்துறை அடுத்த துடுப்பதி ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்தவர் கவின் (31). நேற்று மதியம் கவின் தனது குடும்பத்து டன் தோட்டத்து வீட்டிற்கு சென்று விட்டார்.

    அப்போது கவின் வீட்டிற்கு 3 பேர் கொண்ட கும்பல் ஹெல்மெட் அணிந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ள னர். கவின் வீட்டில் இருந்து சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவர் வீட்டுக்கு வந்தனர்.

    அப்போது வீட்டில் 3 மர்ம நபர்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அந்த 3 அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து கவினுக்கு தகவல் தெரிவிக்கப்ப ட்டது. இதேபோல் பெருந்துறை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கவின் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பணம் பொருட்கள் திருடப்பட வில்லை என்பது தெரிய வந்தது.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளியில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவரிடம் கொடுக்க சொல்லியதை தொடர்ந்து, பணம் கொடுத்துவிட்டு சான்றிதழை வாங்கி வந்துள்ளார்.
    • சான்றிதழ் , மாற்று சான்றிதழ் வாங்க வருபவர்களிடம் கட்டாயபடுத்தி பணம் வாங்கி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், அமானி மல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் தான் படித்த பள்ளியான அமானி மல்லாபுரம் அரசு மேல்நிலைபள்ளிக்கு சென்று தமிழ் வழி கல்வி சான்று கேட்டு தலைமை ஆசிரியர் சசிக்குமாரை அணுகி உள்ளார். அப்போது சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் முதலில் பள்ளிக்கு நோட்டுகள், பேப்பர் பண்டல்கள் வாங்கி தருமாறு தலைமை ஆசிரியர் கேட்டுள்ளார்.

    அதன் பிறகு நோட்டு, பேப்பர் பண்டல்களை நாங்களே வாங்கி கொள்கிறோம் பணமாக கொடுத்து விடுங்கள் எனக்கூறி 300 ரூபாய் பணத்தை பள்ளியில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவரிடம் கொடுக்க சொல்லியதை தொடர்ந்து, பணம் கொடுத்துவிட்டு சான்றிதழை வாங்கி வந்துள்ளார. மேலும் கார்த்திக், பணம் கொடுத்ததை தனது செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்.

    குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள தலைமை ஆசிரியர் சசிக்குமார், இது போன்று சான்றிதழ் , மாற்று சான்றிதழ் வாங்க வருபவர்களிடம் கட்டாயபடுத்தி பணம் வாங்கி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

    இது தொடர்பாக மாவட்ட கல்வித்துறையும், தமிழக அரசும் உரிய விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் மாணவர் கார்த்திக் கோரிக்கை வைத்துள்ளார்.

    • போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கூவத்தூரை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது52). இவர் கூவத்தூர் அடுத்த கீழார்கொல்லை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் நகரியம் பகுதியில் உள்ள கடற்கரையில் பழனியப்பன் பிணமாக கிடந்தார். அவர் கடலில் மூழ்கி இறந்து இருப்பது தெரிந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கல்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தலைமை ஆசிரியர் பழனியப்பன் கூவத்தூரில் இருந்து கல்பாக்கம் கடற்கரைக்கு எதற்காக வந்தார்? அவர் கடலில் இறங்கியபோது அலையில் இழுத்து செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கி இறந் தாரா? அல்லது கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
    • போராட்டத்தில் பங்கேற்ற பானுமதிக்கு இன்று காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    நெற்குப்பை:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அண்ணாசிலை அருகே ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் நேற்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடந்தது. வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் முத்துமாரியம்மன், முத்துவேல், பெரியசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கர், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    இதில் நிர்வாகிகள் சிங்கராயர், ஸ்டீபன், ஜோசப் செல்வராஜ், வெங்கட்ராகவன், கருப்பையா, மீனாட்சி சுந்தரம், ஜெயகாந்தன், பெரியசாமி, ராஜா முகமது, நேரு, வேலாயுத ராஜா, மால் முருகன், சரவணன், மதுசூதனன், நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த போராட்டத்தில் நாகப்பன்பட்டி பள்ளி தலைமை ஆசிரியை பானுமதி என்பவரும் கலந்து கொண்டார். இரவு வரை நடந்த போராட்டத்தில் பங்கேற்ற பானுமதிக்கு இன்று காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
    • பாதிக்கப்பட்டவரின் தாய் புகாரளித்த பிறகு தான் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் சாமுவேல்(வயது57). இவர் பள்ளியில் படிக்கும் 5-ம் வகுப்பு மற்றும் 4-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

    இதை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி டெய்சி தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் ஆகியோர் விசாரித்தனர்.

    அப்போது அரசு கூடுதல் வக்கீல் திருவடிகுமார் ஆஜராகி வழக்கின் விசாரணை துரிதமாக நடந்து வருகிறது. மொத்தமுள்ள 30 சாட்சிகளில் 19 சாட்சியங்கள் மீதான விசாரணை முடிந்துள்ளது என்றார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    தலைமை ஆசிரியர் 7.5.2022-ல் குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகி உள்ளார். ஆனால் 5 நாட்களில் புத்தகத்தை சிறையில் வழங்கியுள்ளனர். அதை பெற்றுக் கொண்டதற்காக சம்பந்தப்பட்ட வரும் கையெழுத்திட்டுள்ளார். இந்த வழக்கை பொறுத்தவரை 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்டவரின் தாய் புகாரளித்த பிறகு தான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எனவே குண்டர் சட்ட நடவடிக்கையில் எந்த சட்டவிரோதமும் இல்லை. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    • அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கனகவள்ளியை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் பரிமளா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    • தலைமை ஆசிரியர் கனகவள்ளி 4 மாதத்தில் ஓய்வு பெற உள்ளார்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தோப்பூரை சேர்ந்த சிவபெருமாள் மகன் அஜய்குமார் (வயது10).

    அங்குள்ள ஆதிதிராவிட நலப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த அஜய்குமார் கடந்த 2-ந்தேதி பள்ளி வளாகத்தில் தலையில் அடிபட்டு பலத்த காயங்களுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு அவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

    இந்நிலையில் மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும். குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரி சிறுவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களுடன் நேற்று முன்தினம் இரவு ஆர்.டி.ஓ. புகாரி பேச்சுவார்த்தை நடத்திார். அதில் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    அப்போது அரசு ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது துறைரீதியாகவும், காவல்துறை சட்டரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். இறந்த மாணவனின் குடும்பத்திற்கு அரசு மூலம் உரிய நிவாரணம் வழங்கிட மாவட்ட கலெக்டருக்கு உடனடியாக பரிந்துரை செய்யப்படும். மாணவரின் மரணம் குறித்து சட்டரீதியாக விசாரணை மேற்கொண்டு உண்மை தன்மை கண்டறியப்பட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு மாணவனின் உடலை பெற்று சென்று இறுதி சடங்கு செய்தனர்.

    இந்நிலையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கனகவள்ளியை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் பரிமளா உத்தரவு பிறப்பித்துள்ளார். தலைமை ஆசிரியர் கனகவள்ளி 4 மாதத்தில் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வாடிப்பட்டி அருகே பள்ளி தலைமை தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது.
    • முடிவில் ஆர்.சி. அமலி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நன்றி கூறினார்.


    வாடிப்பட்டி


    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் சி.எஸ்.ஐ. பள்ளி தலைமை ஆசிரியர் ராபின்சன் செல்வகுமாருக்குவாடிப்பட்டி ஒன்றிய அனைத்து உதவி பெறும் பள்ளிகள் சார்பாக பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவிற்கு சோழவந்தான் எபினேசர் துரை ராஜ் தலைமை தாங்கினார். கென்னடி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் ஜெயக்குமார் வரவேற்றார்.


    இந்த விழாவில் வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஷாஜகான், அகிலத்து இளவரசி, ஜெயசித்ரா, ராணி குணசீலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். வாடிப்பட்டி அனைத்து உதவி பெறும் பள்ளிகள்சார்பாக தலைமையாசிரியர் ராபின்சன்செல்வகுமாருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் ஆர்.சி. அமலி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டாலின் நன்றி கூறினார்.


    ×